அன்பின் கதை!
குட்டிக்கதை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.*
 *பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....*
 
*அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,*
 *இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....*
 *அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.*
 *உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,* 
*இல்லையேப்பா..,*
*நல்லா தானே இருக்கு" என்பார்.*
*உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.*
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,
ஏங்க.. 
*"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு"....!!*
 *"என் தினமும் இப்படி நல்லா இல்லைனு*
*சொல்லி டிராமா போடறீங்க"* 
 உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்....., 
*"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க"....!!*
ஆனாலும்...,
 *"தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க".....!!*
நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்.....,
 *" தினம்*
*அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்"......!!*
*தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு......,*
அந்த பாட்டியிடம்,
*"அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்".....!!*
 *"இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்"....?*
 உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு...., 
*அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி....,*
*"கொடுத்து சாப்பிட வைக்கிறான்"......!!*
*இது எனக்கு தெரியாது என்று*
*நினைக்கிறான்...!!*
*"நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை"..!!*
 மாறாக...
 *" அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது"...*
என்றார் அன்போடு....,
*இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்*
*ஜீவன் இன்னும் இருக்கு.....!!*
*"அன்பை விதையுங்கள்"....!!*
*" *அதையே அறுவடை செய்வீர்கள்".......!!*
Comments
Post a Comment