கையில் தங்க கை கடிகாரம் அணியும் சிவசைலம் பரமகல்யாணி அம்பாள்:


திருநெல்வேலி மாவட்டம்., ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ளது சிவசைலம் பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் திருக்கோவில். பாண்டிய நாட்டில் அபூர்வமாக காணப்படும் நான்கு திருக்கரங்கள் உடைய அம்பாள் இந்த பரமகல்யாணி. (பாண்டிய நாட்டில் பெரும்பாலும் அம்பாள் இரு கரங்கள் கொண்ட நிலையில் தான் காட்சியளிப்பாள். மதுரை மீனாட்சி, திருநெல்வேலி காந்திமதி, பாபநாசம் உலகாம்பிகை, சங்கரன்கோவில் கோமதி என அனைத்து அம்பிகையும் இருகரங்கள் கொண்ட கோலமே.) 


இங்கு விழாக்காலங்களில் பரமகல்யாணி அம்மைக்கு ஆபரணங்கள் அணிவிக்கும் போது, கைகளில் சற்றே வித்தியாசமாக தங்க கைகடிகாரம் அணிவிக்கப்படும் என்பது தனிச்சிறப்பு.


*நாயடியேன்*

*குமரேசன் இராஜசிம்மன்*

Comments

Popular posts from this blog

Thought for the Day - Activity for the Brain