*மனைவி*


*அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது*


*நான்* காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன்

*நீ* நெருப்புப் புகையோடு

போராடிக் கொண்டிருக்கிறாய். 


*நான்* பல் துலக்குகிறேன்

*நீ* பாத்திரங்களை

புதுப்பிக்கிறாய். 


*நான்* செய்தித்தாளில்

செய்திகளை சேகரிக்கிறேன். 

*நீ* வீட்டில் குப்பைகளை

பெருக்குகிறாய். 


*நான்* உடலை சுத்தம் செய்கிறேன். 

*நீ* ஆடைகளின் அழுக்குகளை

பிரித்துக் கொண்டிருக்கிறாய். 

.

*நான்* பசியாற வயிற்றை நிரப்புகிறேன். 

*நீ* பாத்திரங்களை

நீரால் நிரப்புகிறாய். 


*நான்* அலுவலகம் கிளம்புகிறேன். 

*நீ* பிள்ளைகளை

சீருடையில் அனுப்பி விட்டு என்முறைக்காக காத்திருக்கிறாய். 


*நான்* இரவு வீடு திரும்புகிறேன். 

*நீ* இன்னும் திரும்பவில்லை

சமையலறையிலிருந்து. 

*நான்* தூங்கச்செல்கிறேன். 

*நீ* கதவின் தாழ்ப்பாள்களையும்

எரியும் மின்விளக்குகளையும்

பிள்ளைகளின் போர்வைகளையும்

சரிபார்த்து விட்டே

படுக்கையில் விழுகிறாய். 


ஒவ்வொரு ஞாயிறுகளும்

ஒவ்வொரு பண்டிகைகளும்

எங்களுக்கு ஓய்வு நாட்கள்

👉 *உனக்கு?*


உறவு வீட்டு விழாக்களில்

எங்களிடத்தில் *நீ!*


கல்விக்கூடங்களின்

கேள்விகளுக்கான பதில் *நீ!*


சோக நிகழ்வுகளிலும்

கண்ணீர் சிந்திய படி *நீ!*


எங்களின் பிரதிநிதியாக 

கோவில்களிலும் *நீ!*


என் வாழ்க்கைத்தோழியே!

இப்போதெல்லாம்

" நான் வேலைச்செய்கிறேன்''

என்று சொல்லவே

தயக்கமாக இருக்கிறது

கழிந்தப் பொழுதின்

உன் ஒற்றைப் பதிலால்..


புள்ளிவிபரம் சேகரிக்க வந்த அரசு ஊழியர் உன்னிடம் கேட்டார்

" வேலைப் பார்க்கிறீர்களாமா?"


உன் பதில்..


*"இல்லங்க..*

*நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்...".*


🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔


*மனைவியை நேசிப்போம், ஒரு  விதத்தில் அவளும் நம் தாய் தான்..*


*படித்ததில்_பிடித்தது*

Comments

Post a Comment

Popular posts from this blog