*ஒரு முறை சொன்னாலே*
*ஏழு தலைமுறை பாவங்களை* *போக்கும் சிவ மந்திரம்*!!
சிவன் என்றால் தமிழில் “சிவந்தவன்” என்று பொருள்.
எந்த நேரமும் யோகநிலையில் இருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் கருதப்படுவதால் பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் இவர் அழைக்கப்படுகிறார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
இவர் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம கடவுளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
சிவன் என்றால் மங்களகரமானவர், அருள்நிறைந்தவர், கருணைமிக்கவர் என்று பொருள்படும்.
இந்த அருள் நிறைந்தவரின்
*ஓம் நமசிவயா* எனும் பஞ்சாட்சர மந்திரம்
உலகில் மிகவும் புகழ் பெற்றதும் சக்தி வாய்ந்ததும் கூட.
அதே போல் பல மடங்கு சக்தியை கொண்டதாக நம்முடைய 7 தலைமுறை
சாபம், பாவங்களை நீக்குவதோடு நம் பெற்றோர்கள், முன்னோர்களின் 7 தலைமுறைக்கும் சுமார்
267 தம்பதிகள் செய்த பாவத்தை நீக்கக் கூடிய மிக சக்தி வாந்த சிவ மந்திரத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்
ஏழு தலைமுறை பாவங்களை போக்கும் சிவ மந்திரம் இதோ!
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய, சிவாய நம ஓம்
இந்த மந்திரத்தை மாதம் தோறும் வரும் பிரதோஷ தினங்கள்,மற்றும் மாத சிவராத்திரி நாட்களில்ல் ஏதாவது ஒரு பழைய சிவ ஆலயத்தில் இருந்து ஒரே ஒரு முறை சொன்னால் போதும்.
இந்த சக்தி வாய்ந்த மந்திரம்
நாம் செய்த பாவங்கள் உடனே நீக்கும் சக்தி வாய்ந்தது.
மேலும் இந்த சக்தி வாய்ந்த மந்திரம், நம்முடைய பாவங்களை நீக்குவதோடு,
நமது 7 தலைமுறைகளுக்கான சாபம்,மற்றும் நமது முன்னோர்களின் 7 தலைமுறைகளில்
சுமார் 267 தம்பதிகள் செய்த பாவத்தை நீக்கக் கூடியதாக வாய்ந்தது.
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment