👉😎 *25 மைக்ரோ கதைகள்.....!*😱 *1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை....*👶 *-ஜெயா சிங்காரம்* *2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான்.....*😠 *- பிரபு பாலசுப்பிரமணியன்* *3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் நடராஜ்....*🙆‍♂️ *-தனுஜா ஜெயராமன்* *4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம்......!*😍 *-சி.பி.செந்தில்குமார்* *5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை........!*🤦‍♂️ *-கல்யாணி சேகர்* *6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை....!*😥 *-கவிதா ஹரிஹரன்* *7. ஒரு மெளனத்தின் அலறல்....!*🤔 *சைலண்ட் மோடில் செல்போன்.....!*😱 *-மன்னன் உசைன்* *8. சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி "சமமா பிரிச்சுக்கலாம்'' என்றான்.....!*🤭 *-ஆர்.திலகவதி ரவி* *9. பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம்.....!*👾 *-அ.வேளாங்கண்ணி* *10."டேய்......! நீ இன்னொரு பையனை கட்டியிருந்தாலும் மனசு ஆறும்'' திட்டினார் பெண் ரோபோவுடன் வீட்டுக்கு வந்த மகனை.......!!*😡 *-ஸ்ரீவித்யா KM* *11. அவன் அதிர்ஷ்டக்காரன்....!? மனைவி கிடைத்தாள் மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே......!!!*🥰🤩 *-தயா.ஜி.வெள்ளைரோஜா* *12. ''பிள்ளை பெத்துக்கத் துப்பில்ல'' வீட்டில் திட்டு வங்கியவள் பால் கொடுத்தாள் யாரோ பெற்ற பிள்ளைக்கு....?! "கட்'' என்றார் இயக்குனர்.....!!!*🤰 *-விஜி.முருகநாதன்* *13. யானையின் வழித் தடத்தில் அமைந்த இருப்புப் பாதையில் விரைவு ரயில் வருகிறது. யானை மெதுவாகக் கட..க்..கி..ற..!*🛤🐘 *-பழனீஸ்வரி தினகரன்* *14. நாடுகளிக்கிடையில் பேச்சு வார்த்தை....!* *மேஜைகளுக்கடியில் துப்பாக்கிகள்....!*🎭 *-முரளி, மதுரை* *15. "பேய்களில் நம்பிக்கையில்லை'' என்றான் சுடுகாட்டில்..... கல்லறைக்குள்ளிருந்து சிரிப்புச் சத்தம்....!!!*👻 *-ரெஜி தரகன்* *16. நடிக்க வந்த குழந்தைக்கு கேரவனில் நடிகை பால் கொடுத்தாள்.....குழந்தை சிரித்தது..... மார்பில் வலி குறைந்தது......!*👩‍🎤 *-செல்லம் ஜெரினா* *17. 'ஒரு ஊரில்' என்று ஆரம்பித்தார் தாத்தா.* *'சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்கிறான் பேரன்.....!*👨‍🦰 *-இயக்குனர் ஹரி கணேஷ்* *18. "விட்டுடு தம்பி....!'' என்று கதறிய பெண்ணை விட்டுவிட்டு நகர்ந்தான் அனாதை கொள்ளையன்.....!!*😰 *-குமரன் கருப்பையா* *19. "Good morning. We are calling from tamil sangam.......!''*🤦‍♂️🤨 *-அப்துல் ரஷீது* *20. ஊருக்கே உணவு கொடுத்தான் கொள்ளைப் பசியுடன் ஸ்விக்கி டெலிவரி பையன்.....!*😢 *-ஜே.குமார் ராம்* *21. வாசலில் பசியென்ற பிச்சைக்காரனை விரட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றார் அன்னதானம் செய்ய.......!*🤦‍♂️😡👊 *-லக்‌ஷ்மன் மோகனசந்திரன்* *22.ஆம்புலன்சுக்கு போன் செய்யச்சொல்லி அழுதது குழந்தை- மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக........!*😱😍 *-எஸ்.எஸ்.பூங்கதிர்* *23. மாமியாருக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்தாள் மருமகள் - திதிக்காக....!!!*🙆‍♀️ *-ஸ்ரீதேவி மோகன்* *24. இன்றுடன் உலகம் அழிகிறது....!?* *முழு விபரம் நாளைய நாளேட்டில்....!!!*😳🤯😃😂 *-ராம் சின்னப்பயல்* *25. ஸாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தில் அரசியல்வாதி வைத்தார் கைநாட்டு....!!!*😱🤦‍♂️😂 *-கருணாகரன் கருணாகரன்* *.........Raaj*

Comments

Popular posts from this blog