#பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர் ?


#ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.


 #காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.


அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்.


 ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.


வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.


ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? 


அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? 


கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.


வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து


, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். 


என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. 


நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. 


ஆகவேதான் வெள்ளையடித்தேன். 


காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ 


என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

Comments

Popular posts from this blog

Thought for the Day - Activity for the Brain