பேங்க்-ல் கேஷியரிடம் பணத்தை வாங்கி எண்ணும்போது
ஒரு தாள் குறைவது போல் இருந்தது...
“மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா” - ன்னுதான் கேட்டேன் !
பேங்க் கேஷியர் கொஞ்சம் திமிராக ”ஏன் ஒரு தாள் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார் சரியா இருக்கும் !
நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது ! ” ...அப்படீன்னாங்க !
”இல்ல மேடம் ! ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு! " ன்னேன் !
....சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி,
மெஷினில் நாலு தரமும்,கையால் நாலு தரமும் எண்ணி கொடுத்தார்...!!
இதனால் அறியப்பட்ட நீதி...!!
" தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் ! "
*யாரோ* அனுப்பியது😁😁😁😂😂😂
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment