நந்திக்கு தனிக்கோயில்
திருச்சியில் நந்திக்கு என்று ஒரு தனிக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் உள்ள தெருவுக்கு ‘நந்திக் கோயில் தெரு’ என்றே பெயர். இங்கே அருள்புரியும் ஆதிரை நந்தி கிழக்குத் திசை நோக்கிக் காட்சி தருகிறார்.
கோயில் ஆதிரை எதிரே பெரிய தெப்பக்குளமும் உள்ளது. கோயிலின் இடப்பக்கம் செவ்வந்தி விநாயகர் வலப் பக்கம் ஆஞ்சநேயர். இக்கோயி லுக்குள் வேறு எந்தப் பரிகாரத் தெய்வங்களும் இல்லை. எடுத்த காரியங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றியடையும். பக்தர்களால் தினமும் நெய் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஒவ்வொரு பிரதோஷ சிவனுக்குரிய சிறப்பு நாட்களும்
விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment