இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்
புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்
உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்
பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்
அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்
ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்
உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்
பொங்கல் மாதிரி குழைவா பேசனும்
அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்
பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும்
சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்
ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது
நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது
பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது
ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது
புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது
கேசரி மாதிரி இனிமையா பேசனும்
பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்
அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்
அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்
புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்
ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்
டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்
அனைவருக்கும் தேசிய சமையல் தின வாழ்த்துக்கள் 💐💐
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment