இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்
புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்
உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்
பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்
அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்
ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்
உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்
பொங்கல் மாதிரி குழைவா பேசனும்
அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்
பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும்
சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்
ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது
நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது
பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது
ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது
புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது
கேசரி மாதிரி இனிமையா பேசனும்
பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்
அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்
அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்
புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்
ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்
டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்
அனைவருக்கும் தேசிய சமையல் தின வாழ்த்துக்கள் 💐💐
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment