*காலை நேர சிந்தனை*
( 11.01.2022)
சந்தோஷமா இருக்க ஆசையா*
*இதோ மகிழ்ச்சியான*
*வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!*
*1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..*
*༺🌷༻*
எதிலும் நிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க
வேண்டாம். கடந்த ஒன்றை மாற்ற இயலாது. எனவே இப்போதுள்ள வாழ்க்கையை புகார்கள் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள் பழைய
வலிகளிலிருந்து கற்றுக் கொள்ள பாடங்கள்
உள்ளது. அதன் பின்னான உங்கள் வாழ்க்கை
பிரத்யேகமானது, மகிழ்ச்சியின் அலைகள்
உங்கள் மீது விழ முதலில் உங்களை
அனுமதியுங்கள். அதற்கு முதலில் உங்களை
நேசிக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை
முழுமையாக வாழுங்கள். சந்தோஷம் நிம்மதி
எல்லாம் தானாகவே வரும், போகும் மீண்டும்
வரும், புரிந்ததா?
*2. வேலை, வாழ்க்கை இரண்டையும் சமமாகப் பாருங்கள்*
*༺🌷༻*
சிலர் எப்போதும் வேலை வேலை என்று
வாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலக
வேலைக்கு தங்களை அப்படியே ஒப்புக்
கொடுத்துவிடுவார்கள். வேலை முக்கியம் தான். ஆனால் அதைவிட எதற்காக
வேலை முக்கியம் என்னும் சிந்தனை
முக்கியம். #உங்களை நம்பி வந்தவர்களை
நீங்கள் உருவாக்கிய உங்கள் குடும்பத்தை
அரவணைக்க வேண்டும் நேசிப்பதும்
நேசிக்கப்படுவதும் தான் உங்களை மன
மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் முக்கியமான விஷயம்.
*3. உண்மையாக இருங்கள்*
*༺🌷༻*
உங்கள் உணர்வுகளை நேரடியாக
வெளிப்படுத்துபவராக இருங்கள். மனத்தில் ஒன்று நினைத்தும் வெளியில் ஒன்றைச் சொல்லியும் முகமூடியுடன்
வாழாதீர்கள். எப்போதும் மூளைக்கு
மட்டும் இடம் கொடுக்காமல் மனத்தாலும்
வாழப் பழகுங்கள். உங்களுடைய உணர்வுகளை உண்மையாக இருங்கள். அதுவே மகிழ்ச்சியை விதைத்து நல்ல அறுவடையையும் தரும்.
*4. நல்ல நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.*
*༺🌷༻*
ஆங்கிலத்தில் அழகான ஒரு பழமொழி
உள்ளது. உங்கள் தோட்டத்தின் அழகு அதில் எத்தனை பூக்கள் இருக்கிறது என்பதில்
தான் உள்ளது. உங்கள் நாட்கள் அருமையாக அமைய, மகரயாழ் அதில் எத்தனை
பொன்னான தருணங்கள் இருந்தன என்பது
அர்த்தமுள்ளதாக இருக்க அதில் எத்தனை
சந்தோஷமான புன்னகையுடன் இருந்தீர்கள்
என்பது தான் சிறப்பு. மேலும் உங்கள் வயது
நண்பர்கள் உங்களை சுற்றி இருக்கிறது
முக்கியம் உங்கள் வாழ்க்கை
ஏறாமல் அப்படியே இருக்க, எத்தனை
என்பது தான் விஷயம்.
*5. எப்போதும் சந்தோஷமாக இருப்பேன் என்று உறுதியாக முடிவெடுங்கள்.*
*༺🌷༻*
சந்தோஷம் என்பது உங்கள் தேர்வு. ஆம்.
அதைத் தேர்ந்தெடுத்து நமதாக்கிக் கொள்ள வேண்டும். இனிமேல் நான் சந்தோஷமாகவே
இருப்பேன் என்று ஒரு தீர்மானம் உறுதியாக எடுத்து, அதைக் கடைப்பிடித்து பாருங்கள். நம்மால் மாற்ற முடிந்த விஷயங்களை
துணிவுடன் போராடி மாற்றும் திறனும், மாற்ற முடியாத விஷயங்களை உள்ளவாறு
அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்
பக்குவமும், எதை மாற்ற முடியும், எதை
அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஞானமும் இருந்தால் *வாழ்தல் இனிது.*
┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்😊
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்💐
வாழ்க🙌வளமுடன்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋l
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment