*துர்க்கை அம்மன் திசை மாறி காட்சி தரும் ஆலயங்கள்*
கிழக்கு நோக்கிய துரக்கை: கதிராமங்கலம் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள துர்க்கை கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். இந்தத்தலம், கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது. இங்கு காவிரி வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது தனிச்சிறப்பு. அதன் கரையில் அமைந்துள்ள நவ துர்க்கைகளுள் ஓர் அம்சமாகிய "வனதுர்க்கை', மிருகண்டு முனிவரால் வழிபடப்பட்டவள். கவியரசர் கம்பர் பெருமானும் இந்த அன்னையின் அருள் பெற்றவர்.
தெற்கு நோக்கிய துர்க்கை: நாகை மாவட்டம் வேதாரண்யம் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும் கும்பகோணதிற்கு அருகே அம்மன்குடி திருத்தலத்திலும் திருவாரூர் ஆந்தக்குடி ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்திலும் துர்க்கை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள்.
மேற்கு நோக்கிய துர்க்கை: திருவெண்காடு புதன் திருத்தலம். இத்தலத்தில் துர்க்கை மேற்கு திசை நோக்கி அருள் புரிகிறாள். இத்துர்க்கையை வழிபட தடைகள் விரைவில் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.
சயன துர்க்கை: பொதுவாக ஸ்ரீ ரங்கநாதரையே பள்ளி கொண்ட கோலத்தில் நாம் தரிசிக்க முடியும். அம்பிகை பள்ளிகொண்ட கோலத்தில் தரிசிப்பது அரிது. ஆனால் திருநெல்வேலியிலிருந்து தாழையூத்துக்குச் செல்லும் வழியில் கங்கை கொண்டான் என்ற திருத்தலத்துக்கு அருகில் உள்ள "பாராஞ்சேரி' என்னும் இடத்தில் படுத்துள்ள கோலத்தில் துர்க்கையை தரிசிக்கலாம்.
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment