ஆதிலக்ஷ்மி!
‘பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவது வழக்கம்; இன்றும் நம்மிடையே உள்ள சம்பிரதாயமாகும்.
பதினாறு வகைச் செல்வத்துக்கும் மூலமாக விளங்குபவள் ‘ஆதிலக்ஷ்மி.’
சௌந்தர்ய லக்ஷ்மி,
சௌபாக்கிய லக்ஷ்மி,
கீர்த்தி லக்ஷ்மி,
வீர லக்ஷ்மி,
விஜய லக்ஷ்மி,
சந்தான லக்ஷ்மி,
மேதா லக்ஷ்மி,
வித்யா லக்ஷ்மி,
துஷ்டி லக்ஷ்மி,
புஷ்டி லக்ஷ்மி,
ஞான லக்ஷ்மி,
சக்தி லக்ஷ்மி,
சாந்தி லக்ஷ்மி,
சாம்ராஜ்ய லக்ஷ்மி,
ஆரோக்கிய லக்ஷ்மி,
ஆதிலக்ஷ்மி
என்று பதினாறாகவும் விளங்குபவள்.
முக்கோணத்தின் நடுவில் ‘ஆதிலக்ஷ்மி’; மற்றைய மூன்று பக்கங்களிலும் 5 + 5 = 5 பேர்களாக பூஜிக்கப்படுபவள்.
முதலும் முடிவும் இல்லாதவள் ஆதிலக்ஷ்மி. தேவாசுரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்தவள் இவளே.
இவள் அஷ்ட மங்கலப் பொருள்களோடு கூடிய பீடத்தில் அருள்புரிபவள். இவளை வணங்கினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும்.
ஸ்ரீமந் நாராயணனிடம் என்றும் நீங்காது இருப்பவள். இதனாலேயே பெருமானின் வலது பக்க மார்பில் ஸ்ரீவத்சம் என்ற முக்கோண வடிவில் விளங்குகின்றாள்.
அதனாலேயே, இந்த லக்ஷ்மிக்கு இரண்டே கரங்கள்.
ஆதியாக இருப்பதனால், இவளே சகல உயிர்களுக்கும் சகல காரியங்களுக்கும் மூலாதாரமாகும்.
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment