ஐந்து முகங்களின் முக்கியத்துவம் பஞ்சமுக ஆஞ்சநேயர்
கிழக்கே பார்க்கும் முகம்:
ஸ்ரீஆஞ்சநேயரின் திருமுகம்.
இவர் பாவங்களின் கரையை நீக்கி, தூய்மையான மனதை சிந்தனையை அளிப்பவர்.
தெற்கே பார்க்கும் முகம்:
ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் திருமுகம். இவர் எதிர்களிடம் உள்ள நம் பயத்தை போக்கி, வெற்றியை அளிப்பவர்.
மேற்கே பார்க்கும் முகம்:
ஸ்ரீமகாவீர கருடன் திருமுகம். இவருடைய அருளால் தீயசக்திகள், பில்லி, சூன்யம் ஆகியவற்றின் ஆதிக்கம், உடலில் உள்ள விஷத் தன்மைகள் இவை உடனே விலகிவிடும்.
வடக்கே பார்க்கும் முகம்:
ஸ்ரீலட்சுமி வராக மூர்த்தி ஸ்வாமி திருமுகம். கிரகங்களால் ஏற்படக்கூடிய கெட்ட விளைவுகளை நீக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களும், வளமான வாழ்வும் இவர் அருளால் கிடைக்கும்.
வானத்தை பார்க்கும் முகம்:
ஸ்ரீஹயக்ரீவ ஸ்வாமி திருமுகம். இவர் ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை வழங்குவார்..
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment