ஒரு
சமயம்
எம் எஸ்
சுப்புலட்சுமி
அவர்களுக்கு
பாராட்டு விழா
நடைபெற்றது.
செம்மங்குடி
சீனிவாச ஐயர்
தலைமை
தாங்கினார்.
ஒரு
பெரிய
மாலையை
அவருக்கு
அணிவிக்க
செம்மங்குடியிடம்
வழங்கப்பட்டது.
அவரும்
அதனை
பெற்று
எம் எஸ் க்கு
அணிவிக்கும்
முகத்தான்
மைக்கை
பிடித்தவர்
எம் எஸ் ஒரு
பெண்மணி
அவருக்கு
நான்
மாலை போட
இந்த சபை
அனுமதிக்கிறதா?
என்று
கேட்டார்.
அவையில்
இருந்தவர்கள்
அனுமதி தந்தனர்.
அடுத்து
எம் எஸ்
சுப்புலட்சுமி
கணவர்
சதாசிவம்
அனுமதி
அளிக்கிறாரா?
என்று
கேட்டார்.
அவரும்
அனுமதித்தார்.
அடுத்து
என்னுடைய
துணைவியார்
இதனை
அனுமதிக்கிறாரா?
என்று
கேட்டார்.
அவரும்
சம்மதம்
தெரிவித்தார்.
இறுதியாக
எம் எஸ்
சுப்புலட்சுமி
இதற்கு ஒப்பு
கொள்கிறாரா?
என்று
கேட்டார்.
அவரும்
மகிழ்ச்சியாக
தலையை
ஆட்டினார்.
மீண்டும்
மைக்கை
பிடித்த
செம்மங்குடி
எத்தனை பேர்
அனுமதி
தந்தாலும்
எனக்கு
ஏதோ ஒன்று
உறுத்துகிறது
அதனால்
திரு சதாசிவம்
அவர்களே
மாலை
அணிவிக்கும்படி
கேட்டு
கொள்கிறேன்
என்று கூறி
மாலையை
சதாசிவத்திடம்
ஒப்படைத்தார்.
சதாசிவமும்
மாலையை
பெற்று
எம் எஸ் க்கு
அணிவித்தார்.
அவையின்
கரகோஷம்
விண்ணை
பிளந்தது.
செம்மங்குடியை
தடுத்த அந்த
ஏதோ
ஒன்றுதான்
என்ன ???
அதன்
பெயர்தான்
பண்பாடு
கலாச்சாரம்
பாரம்பரியம்.
இது
இன்றளவும்
இந்தியாவில்
ஒட்டிக்கொண்டு
இருக்கிற
காரணத்தால்
தான்
உலகமே
இந்தியாவை
பார்த்து வியந்து
கொண்டிருக்கிறது.
ஒரு
பண்பாடு
இல்லையென்றால்
பாரதம் இல்லை
நம்
பண்போடு
வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
நாமும்
இவைகளை
கடைபிடித்து
வாழ்ந்து
பார்க்கலாம்
வாங்க.
படித்ததில் பிடித்தது.
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment