ஒரு
சமயம்
எம் எஸ்
சுப்புலட்சுமி
அவர்களுக்கு
பாராட்டு விழா
நடைபெற்றது.
செம்மங்குடி
சீனிவாச ஐயர்
தலைமை
தாங்கினார்.
ஒரு
பெரிய
மாலையை
அவருக்கு
அணிவிக்க
செம்மங்குடியிடம்
வழங்கப்பட்டது.
அவரும்
அதனை
பெற்று
எம் எஸ் க்கு
அணிவிக்கும்
முகத்தான்
மைக்கை
பிடித்தவர்
எம் எஸ் ஒரு
பெண்மணி
அவருக்கு
நான்
மாலை போட
இந்த சபை
அனுமதிக்கிறதா?
என்று
கேட்டார்.
அவையில்
இருந்தவர்கள்
அனுமதி தந்தனர்.
அடுத்து
எம் எஸ்
சுப்புலட்சுமி
கணவர்
சதாசிவம்
அனுமதி
அளிக்கிறாரா?
என்று
கேட்டார்.
அவரும்
அனுமதித்தார்.
அடுத்து
என்னுடைய
துணைவியார்
இதனை
அனுமதிக்கிறாரா?
என்று
கேட்டார்.
அவரும்
சம்மதம்
தெரிவித்தார்.
இறுதியாக
எம் எஸ்
சுப்புலட்சுமி
இதற்கு ஒப்பு
கொள்கிறாரா?
என்று
கேட்டார்.
அவரும்
மகிழ்ச்சியாக
தலையை
ஆட்டினார்.
மீண்டும்
மைக்கை
பிடித்த
செம்மங்குடி
எத்தனை பேர்
அனுமதி
தந்தாலும்
எனக்கு
ஏதோ ஒன்று
உறுத்துகிறது
அதனால்
திரு சதாசிவம்
அவர்களே
மாலை
அணிவிக்கும்படி
கேட்டு
கொள்கிறேன்
என்று கூறி
மாலையை
சதாசிவத்திடம்
ஒப்படைத்தார்.
சதாசிவமும்
மாலையை
பெற்று
எம் எஸ் க்கு
அணிவித்தார்.
அவையின்
கரகோஷம்
விண்ணை
பிளந்தது.
செம்மங்குடியை
தடுத்த அந்த
ஏதோ
ஒன்றுதான்
என்ன ???
அதன்
பெயர்தான்
பண்பாடு
கலாச்சாரம்
பாரம்பரியம்.
இது
இன்றளவும்
இந்தியாவில்
ஒட்டிக்கொண்டு
இருக்கிற
காரணத்தால்
தான்
உலகமே
இந்தியாவை
பார்த்து வியந்து
கொண்டிருக்கிறது.
ஒரு
பண்பாடு
இல்லையென்றால்
பாரதம் இல்லை
நம்
பண்போடு
வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
நாமும்
இவைகளை
கடைபிடித்து
வாழ்ந்து
பார்க்கலாம்
வாங்க.
படித்ததில் பிடித்தது.
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment