☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*_☘️உங்களை வலுப்படுத்த தெரிந்தவர்களிடம் மட்டும் உங்கள் குறைகளை சொல்லுங்கள்._*
*_☘️உங்களை பின்பற்றி வருபவர்களிடம் மட்டும் வழியை சொல்லுங்கள். உங்களை நேசிக்க தெரிந்தவர்களிடம் மட்டும் அன்பை சொல்லுங்கள்._*
*_☘️யாரோ ஒருவரின் அர்த்தமில்லாத நிராகரிப்பிற்காக கவலைப்படாதீர்கள். துணிக்கடையில் பல பேரால் ஒதுக்கப்பட்ட ஓரு துணி யாரோ ஒருவருக்கு பிடித்து போனதாய் அமைகிறது._*
*_☘️உங்களுக்கு பிடிக்காதவர்களையும்,_*
*_உங்களை பிடிக்காதவர்களையும் கடந்து செல்லுங்கள். உங்களுக்கான நிம்மதி தானாக கிடைக்கும்._*
*_☘️✍🏼🌹_*
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment