கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பகுதி: சுல்தானின் மனைவி வீர சிவாஜியின் அந்தப்புரத்தில்.
(ஒரு சுல்தானின் மனைவியை சிறைபிடித்த சிவாஜியின் வீரர்கள்!)
சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின.
அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு அளித்து விடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.
அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் ஒரு சுல்தானின் மனைவி பார் போற்றும் பேரழகி இவள் அழகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு அளிக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.
சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார் அந்த பெண்ணின் அழகு கண்டு வியக்கிறார். ஏற்கனவே அச்சத்தில் இருந்த அந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு பயத்துடன் சிவாஜியை பார்க்கிறாள்.
சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் பேரழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நான் இன்னும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை கையெடுத்து கும்பிடுகிறாள்.அப்போது அவள் கண்களுக்கு வீரசிவாஜி ஒரு கடவுளாகவே தென்படுகிறார்.
தனது தளபதியை கடுமையாக சினந்து கொண்ட சிவாஜி, “பெண்கள் நம் பாரத நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மண்ணாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.
மாமன்னர் சத்ரபதி சிவாஜி.
இந்த உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மூன்று வகைகளில் அடங்கிவிடுவர்.
1)நல்லவர்கள்
2) கெட்டவர்கள்
3) சந்தர்ப்பம் கிடைக்காமல் நல்லவர்கள் என்ற போர்வையில் வாழும் கெட்டவர்கள்.
எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது இந்த பாரதத்தின் பண்பட்ட கலாச்சாரம்.
இந்த கலாச்சாரத்தின் மேன்மையான குணங்களுடன் வாழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி அவரைப்பற்றிய சிறப்புகளை
நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
1. “காபூலில் இருந்து காந்தஹார் வரை என தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது.
ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன. ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. அல்லாவே! எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய்.
இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு”
என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த “நமாஸ், பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கஸேப் படித்துள்ளார்.
2. “அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்;
என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன்” என்று அபு தாலிபன் அரசனான ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்.
3. “என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?” என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் , பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.
4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர், “ உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்” என்று சொன்னார்.
5. சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல, அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம்” என லார்ட் மவுண்ட்பேட்டன் சொன்னார்.
6. “சிவாஜி இன்னும் பத்தாண்டுகள் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது” என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.
7. “சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம்” என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.
8. “சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி;
இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும்” என ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.
9. சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரை “சூரியன்” என்றே போற்றியிருப்போம்” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.
10. சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம் , கின்னஸ் பத்தகத்தில் பதிவாகி உள்ளது.
30000 உஸ்பெக் வீரர் படையை, 1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது.
பட்டுமல்லாமல், எதிரிப் படையில் ஒரு வீரர் கூட திரும்பிப் போக விடாமல் அழித்தது. இது தான் உலக சாதனை.
11. சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார்.
பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.
12. சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான், துருக்கி, ஆஃப்கானிஸ்தான், மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான்.
இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.
13. ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி, இந்தியாவின் முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார்.
ஆனால், அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன், சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார்.
(பிறந்தது: 19-2-1630; இறந்தது: 3-4-1680).
14. பாஸ்டன் பல்கலைக் கழகத்தில், “ மேலாண்மைக்கு குரு சிவாஜி” என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது.
இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் அதிகம் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை.
மாறாக நாம் அடிமைப்பட்டது நம்மை அடிமைப்படுத்தி அவன் அவனுடைய பெருமைகள் மட்டுமே அதிகமாக வரலாற்று புத்தகத்தில் இருக்கும்.
அப்புறம் எப்படி தேசம், தியாகம், வீரம், விவேகம், புத்திசாலித்தனம், அஞ்சாநெஞ்சம் போன்றவை எதிர்கால சந்ததிகளுக்கு எவ்வாறு வரும்?
வாய் சவடால் அடித்துக் கொண்டு,
மதுவுக்கும் பிரியாணிக்கும் நாக்கை தொங்கபோட்டு
வெள்ளைக்காரன் மெக்காலே உருவாக்கிய பாடத்திட்டத்தை முற்றிலுமாக எடுத்துவிட்டு இந்த பாரத தேசத்திற்கான கல்வித்தரத்தை நமக்கு நாமே மாற்றியமைக்க வேண்டும்.
இங்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே குருகுலங்களில் கற்றுத் தரப்பட்ட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்கள் தான். இன்றுவரை நான் போற்றப்படும் சரித்திர நாயகர்கள் அந்த காலகட்டங்களில் உலகின் மற்ற பகுதிகளில் மக்கள் நாடோடியாக தான் இருந்தார்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள்
ராஜராஜசோழன், கரிகால சோழன் எந்தக் கல்லூரியில் கட்டிடக்கலை படித்தார்கள்.
கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர், போன்ற பெரும்பான்மை குருமார்கள் எங்கே இலக்கியம் பயின்றார்கள்.
பதினெட்டு சித்தர்கள் சொல்லாத மருத்துவ குறிப்பு இந்த உலகத்திலேயே இல்லை அவர்கள் மருத்துவக் கல்வி எங்கே கற்றார்கள்.
இன்னும் பலவிதமான சாதனைகள் இருக்கின்றன அனைத்தையும் வரிசைப்படுத்த இங்கே இடம் போதாது.
அனைத்தும் நடந்தது பிரபஞ்ச இயக்கத்தை தங்களின் உடலோடு இணைத்து இந்த உலகமே ஒன்றுதான் என்று உணர்ந்ததனால்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நமக்கோ தமிழ் மட்டுமே தெரியும். ஆனால் சிவாஜியோ மராட்டிய மன்னர். இதில் அவரைப் பற்றிய ஒரு நல்ல பதிவு படித்து நமது தேசபக்தியை வளர்ப்பதில் முனைய வேண்டும் . நமது நல்ல குணங்களை பாதுகாப்பதில் முனைய வேண்டும். அதற்காகத்தான் இந்த பதிவு முக்கியமாக பகிரப்பட்டது. இந்த பதிவில் வரலாற்று உண்மைகள் நிறையவே இருக்கலாம். ஓரிரண்டு அதிகமாகவும் எழுதி இருக்கலாம். அதைப் பற்றி கவலை படவில்லை. ஆனால் தேசபக்தியும் தனி மனிதனுடைய நல்ல குணங்களும் நல்ல எண்ணங்களும் முக்கியமாகக் கொள்வோம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
An awesome post that must be read: Dr Sarvepalli Radhakrishnan, a great teacher, Philosopher and former President of India in whose honour Teachers' Day is celebrated , was an exceptionally witty man. The King of Greece came to India on a state visit. President Radhakrishnan welcomed him at Palam Airport. . “Your Majesty! You are the first King of Greece to come to India on invitation. The last time, Alexander the Great came uninvited.” 😂 Gandhiji: Don’t drink milk, which is the essence of beef. Radhakrishnan: “In that case we all are cannibals. For we drink our mother’s milk, which is the essence of human flesh.” 😂 Winston Churchill while having a cup of tea said to Dr. Radhakrishnan: Sugar is the only English word where "s" is pronounced as "sh" Dr. quipped: "Are you sure?" 😂 Once Winston Churchill hosted a State banquet in honor of Dr Radhakrishnan, who washed his hands before eating and used his hands for having the food while Churchill used...
Comments
Post a Comment