ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் பேரழிவின் போது,
1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர்,
ஜோ ஓ டோனல் என்பவராலேயே
எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம்.
ஒரு ஜப்பானிய சிறுவன்,
உடல் தகனம் செய்யும் இடத்தில், இறந்த தனது
சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையிலே நிற்கிறான்.
அழக்கூடாது
என்ற வைராக்கியத்துடனே கண்ணீரைக் கட்டுப்
படுத்த,
தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால்,
வழியும் இரத்தமும் சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது.
நீ பையில்
சுமக்கும் சுமையை என்னிடம் கொடு என்று காவலர் ஒருவர்
கேட்ட போது,
சுமப்பதற்கு
கடினமாக உணர
இது ஒன்றும்
பொருளல்ல,
என் சகோதரன்,
என்று சிறுவன்
பதில் அளித்ததாக புகைப்படம்
எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார்.
இன்றைக்கும் ஜப்பானில்,
இந்த புகைப்படமே வலிமையின் அடையாளமாகவே பயன்படுத்தப்
படுகிறதாம்.
ஆம்,
எதை சுமக்குறோம் என்பதல்ல,
அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதே மிக முக்கியம்.
பணம் -
சொத்துக்களுக்காக உறவினரையும், உடன் இருப்பவரையும் ஏமாற்றும்,
இன்றைய தலைமுறைக்கும்
இதில் கற்றுக் கொள்ள
நிறைய பாடம் இருக்கிறது.
( வாட்ஸ் அப் பகிர்வு)
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Arumaiyaane padhivu...
ReplyDelete