*நாளை*(15-5-2022)
*ஞாயிற்றுக்கிழமை சுபகிருது* *வைகாசி 1 சதுர்த்தசி திதியுடன்* *கூடிய வாழ்வை வளமாக்கும்* *விஷ்ணுபதி புண்ணிய காலத்தை*
*தவற விட்டு விடாதீர்கள்!
உங்கள் வாழ்க்கையில்
கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?
நாளைய விஷ்ணுபதி
புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும்
வழிபடுங்கள்
விஷ்ணுபதி புண்ய காலமானது வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களில் முதல் தேதியில் வரும்.
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதங்களாக கருதப்படுகிறது.
விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம் எனப்படும்
ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர கூடியது இந்த விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும்.
மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள்வருவது உண்டு.
விஷ்ணுவுக்குரிய மாதங்களான மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்கள் பிறக்கும் தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த விஷ்ணுபதி புண்ய காலநேரம் அமைகிகிறது.
முழுமையாக 9 மணி நேரம் இந்த விஷ்ணுபதி புண்யகாலம் அமைந்து இருக்கும்.
நாளை(15-5-2022) வைகாசி மாதம் பிறக்கும் நாளில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை முழுமையாக 9 மணி நேரம்
இந்த விஷ்ணுபதி புண்ய கால
நேரம் அமைகிகிறது.
இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும்
மனதார வழிபட்டு நமது எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும்
கூறி பிரார்த்தனை புரியலாம்.
நாளை உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மரத்தை நமஸ்காரம் செய்து 27 உதிரி பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன்பாக வையுங்கள்.
27 சுற்று முடித்த பின்பு
மீண்டும் கொடிமரத்தை
நமஸ்காரம் செய்யுங்கள்
பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு உங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள்
உங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த ஆவணி, கார்த்திகை மாசி மாதங்களில் முதல் தேதி வரும் மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்,நிறைவேறியே தீரும்
மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த விஷணுபதி புண்ய கால நாள் அமைந்து உள்ளது...
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெற நாளைய விஷ்ணுபதி புண்ய காலத்தை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment