சிந்திக்க வேண்டிய பதிவு
━━━━━━━━━━━━━━━━━━
அதனால் பகிர்ந்தேன்.
━━━━━━━━━━━━━━━━
அவசியம் படியுங்கள்
━━━━━━━━━━━━━━━━
ஒரு முஸ்லிம் எழுத்தாளர் இந்தக் கட்டுரையின் மூலம் இந்து சமூகத்திற்கு சில உண்மைகளை உணர்த்தியுள்ளார்.
●
இது உண்மையிலே சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.
●
உங்கள் திருமணமான பெண்கள் புடவை அணிவதை நிறுத்திவிட்டார்கள்.அவர்களை தடுத்தது யார்?
●
உங்கள் நெற்றியில் திலகம் ஒரு காலத்தில் உங்கள் அடையாளமாக இருந்தது. நீங்கள் வெறுமையான நெற்றியை அசுபமாகவும், துக்கத்தின் அடையாளமாகவும் கருதுகிறீர்கள். ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் திலகம் அணிவதை நிறுத்தி விட்டது மட்டுமல்ல, உங்கள் பெண்களும் ஃபேஷன் மற்றும் நவீனத்துவம் என்ற பெயரில் நெற்றியில் திலகம் பூசுவதை விட்டுவிட்டீர்கள்.
●
உங்கள் பாரம்பரிய விழாக்களை மறந்துவிட்டீர்கள்.
●
எங்கள் சமூகத்தில், ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொண்டால், அவர் தனது தந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு, இபாதாத் / நமாஸ் மற்றும் இபாதாத் / நமாஸை தனது வாழ்நாள் கடமையாகக் கருதுகிறார்.
●
ஆனால் இந்துக்கள் பெரும்பாலோர் கோவில்களுக்கு செல்லாதது மட்டுமல்ல, கோயில்களை பார்ப்பதைக் கூட விட்டுவிட்டீர்கள். ஒருசிலர் கோயிலுக்கு சென்றாலும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் சுற்றுலா போல செல்கிறீர்கள். அதுவும் பெரும்பாலானோர் பகவானிடம் இருந்து ஏதாவது ஒன்றை விரும்பும்போதோ அல்லது துன்பத்தில் இருக்கும்போதோ மட்டுமே கோயிலுக்கு செல்கின்றனர்.
●
உங்கள் குழந்தைகள் கோவிலுக்குச் செல்வதற்கான சரியான காரணத்தையும், கோயிலில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், வழிபடுவது அவர்களின் கடமை என்பதையும் அவர்களுக்கு நீங்கள் சொல்கிக்கொடுத்து ஆன்மீகத்தை அவர்களுக்கு உணர்த்தி வழி நடத்த தவறி வருகிறீர்கள்.
●
உங்கள் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் படித்த பிறகு ஆங்கில கவிதைகள் சொல்வதில் நீங்கள் பெருமிதம் கொள்கிறீர்கள்.
ஆனால் உங்கள் பிள்ளைகள் ஆன்மீக ஸ்லோகங்களை அறிந்து கொள்ளாததைப் பற்றி கவலை கொள்வதில்லை.
●
எங்கள் வீடுகளில் ஒரு குழந்தை பேசத் தொடங்கும் போது, பெரியவர்களுக்கு "சலாம்" சொல்லக் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் நீங்கள் வணக்கம், நமஸ்காரம் மற்றும் பிராணாமத்தை ஹலோ, ஹாய் என்று மாற்றிவிட்டீர்கள்.
●
எங்கள் குழந்தைகளும் கான்வென்ட்டில் இருந்து திரும்பிய பிறகு, உருது, அரபு மொழியைக் கற்று, மதப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்குகிறார்கள். உங்கள் பிள்ளைகள் ராமாயணம், கீதை, திருவாசகம் போன்ற ஆன்மீக நூல்களை நீங்கள் படிக்க வைப்பதில்லை .
●
நாகரீகம், வரலாறு, மரபுகள், பாரம்பரியம் போன்ற அனைத்தையும் நீங்கள் அதிகம் கொண்டிருந்தீர்கள்.
குருட்டு நவீனத்துவம் என்ற பெயரில் அனைத்தையும் தியாகம் செய்து வருகிறீர்கள்.
●
ஆனால் நாங்கள் எங்களுக்கான மறப்புகளையும், பாரம்பரியத்தையும் மறக்காமல் பின்பற்றுக்கிறோம். அதுதான் உங்களுகுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். உங்கள் வேர்களுடனான உறவை முறித்துவிட்டீர்கள். ஆனால் நாங்கள் எங்கள் வேர்களை நேற்றோ அல்லது இப்போது விட்டுவிடவோ விரும்பவில்லை.
●
நீங்கள் திலகம், யக்ஞோபவீதம், சிகை அணிவதைத் தவிர்க்கிறீர்கள். உங்கள் பெண்கள் திலகம், வளையல்கள் மற்றும் மங்களசூத்திரம் அணிவதற்கு வெட்கப்படுகிறார்கள். நீங்கள் அவற்றைத் தேவையற்றதாகக் கருதுகிறீர்கள் மற்றும் உங்கள் அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டுவதில் சங்கடமாக உணர்கிறீர்கள்.
●
நவீனத்துவம் என்ற பெயரில், அதிகாலை 4 - 5 மணிக்கு எழும் பழக்கத்தை விட்டுவிட்டு, உங்கள் சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள், மரபுகள், சடங்குகள் செய்ய தவறிவிட்டீர்கள்.
●
உங்கள் மொழி, உங்கள் பாரம்பரிய ஆடை அணிகலங்கள் ஆகியவற்றைப் பின்தங்கிய நிலை என்று நினைத்துக் கொண்டு விட்டீர்கள்.
●
ஒரு சமூகம் தன் அடையாளங்களைப் பாதுகாக்க இயற்கையாகவே விழிப்புடன் இருக்க வேண்டும் ஆனால் இப்போது துரதிர்ஷ்டவசமாக உங்கள் சமூகத்தின் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருக்கிறீர்கள்.
●
உங்கள் நாகரீகம், கலாச்சாரம் அழிந்துவிடுமோ என்ற பயம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுக்கான உண்மையான காரணங்கள் என்னவென்று சிந்தியுங்கள்.
●
உண்மையான பிரச்சனை என்னவென்றால், உங்கள் சமூகம் விழித்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் நீங்களே உங்களை நடைமுறைக்கு உதாரணமாகக் காட்டவில்லை. உங்கள் புகழ்பெற்ற மரபுகளில் வேரூன்றியவராக மற்றவர்கள் உங்களைப் பார்ப்பதில்லை. எனவே சமூகம் மட்டுமல்ல, உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களும் உங்கள் மதப் பேச்சுகளைக் கேட்பதில்லை.
●
நாங்கள் யோகாசனங்களுடன் ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் வாசிப்போம்.
தொப்பி, உடை போன்றவற்றின் அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வதில் இப்போதும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
●
பல தசாப்தங்களாக உங்கள் இந்து அடையாளத்தை அழிப்பதில் நீங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் பாரம்பரியத்தை நிலைநிறுத்த நீங்கள் தவறிவிட்டீர்கள்.
●
மற்ற சமூகங்களைக் கண்டு கலங்குவதற்குப் பதிலாக, உங்கள் மரபுகளில் நம்பிக்கையைப் பேணுவது எப்படி, அவற்றில் பெருமை கொள்வது எப்படி, விழிப்புடன் இருப்பதன் மூலம் பாராம்பர்யத்தை பாதுகாப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது அவசியம்.
●
முதலில் உங்கள் நாகரீக அடையாளம் மற்றும் அதன் சின்னங்களை அணிந்து கொள்வதில் பெருமிதம் கொள்ள உங்கள் சமூக கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள விழிப்புணர்வை உருவாக்குங்கள்.
●
உங்களையும் உங்கள் சமூகத்தையும் புத்திசாலிகள் என்று நீங்கள் கருதினால், உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அதன் இருப்பை வெளிப்படுத்தி பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், உங்கள் தர்மத்தையும் காப்பாற்ற வாழ பழகிக் கொள்ளுங்கள்.
●
வளர்க பாராம்பர்யம்.
Read somewhere and felt like sharing. A must read for females especially 👍 A few years ago, my friend had just crossed age 50. Just about 8 days later she was struck with an ailment ... And she died swiftly. In the group we received a condolence message that ..."Sad .. she is no more with us"... *RIP* 🙏 Two months later I called her husband. A thought crossed my mind ..he must be devastated as he had a travelling job. Till her death she would oversee everything.. home.. education of their children... Taking care of the aged in-laws.. their sickness.. managing relatives.. _*everything, everything, everything*_ She would express at times.." my house needs my time, .. my hubby cant even make coffee tea, my family needs me for everything, but no one cares or appreciates the efforts i put in. I feel they all take me for granted ". I called her husband to see if the family needed any support, as, i felt her hubby must be feel...
Comments
Post a Comment