தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை
I. உடற்பயிற்சி என்பது மருத்துவம்.
ii விரதம் இருப்பது மருத்துவம்.
iii இயற்கை உணவே மருந்து.
iv. சிரிப்பு ஒரு மருந்து.
v. காய்கறிகளே மருந்து.
vi. தூக்கமே மருந்து.
vii. சூரிய ஒளியே மருந்து.
viii. ஒருவரை நேசிப்பது மருத்துவம்.
ix. நேசிக்கப்படுவது மருத்துவம்.
x. நன்றியுணர்வு என்பது மருத்துவம்.
xi குற்றத்தை மன்னிப்பது மருத்துவம்.
xi தியானம் என்பது மருத்துவம்.
xiii. கடவுளைப் பற்றிய தத்துவங்களை படிப்பதும் மருத்துவம்.
xiv. பாடுவதும் ஆடுவதும் துதிப்பதும் மருத்துவம்.
xv சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம்.
xvi சரியாகச் சிந்திப்பதும், சரியான மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம்.
xvii. தன்னை நம்புவதும் மருத்துவம்
xviii. நல்ல நண்பர்கள் இருப்பதும் மருத்துவம்.
xix. தன்னை மன்னிப்பதும் மற்றவர்களை மன்னிப்பதும் மருத்துவம்.
இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களின் மருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment