Thanks Varadarajan Ramanathan
அதெப்படி திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்காக வேலை எடுத்துட்டு வரும் போது கருடன் பறக்குது?
சபரிமலைல திருவாபரணப் பெட்டி மலை ஏறும் போதும் கருடன் பறக்குது?
பழனி சூரசம்ஹாரத்துல வேல் மலைல இருந்து கீழ இறங்கும் போது மழை வருது?
இன்னைக்கி தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துலயும் கூட எப்படி கும்ப அபிஷேகம் நடக்கும் போது கருடன் வட்டமிடுது?
பகுத்தறிவாளர்கள் வியப்பு..!
உண்மைலேயே எங்களுக்கும் கூட இது புரியாத புதிர்தான். ஆனா இதுல ஆச்சர்யப்பட ஒன்றுமே பெரிதாக இல்லை.!
வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவது நாதன் நாமம் அதாவது இறைவன் பெயர்
எங்கெல்லாம் வேத பாராயணம் நடக்கிறதோ அங்கெல்லாம் கருடாழ்வார் பிரத்யக்ஷம் ஆவார். கருடாழ்வார் வந்த பின்னர் ராகுவாது, கேதுவாது இல்ல சனியாவது கருடனின் அருள்பெற்றால் நவகிரஹ தோஷம்லாம் நம்பளை கிட்ட கூட நெருங்க முடியாதுங்க
கருடாழ்வாரின் ஆற்றல் என்பது சாதாரணமானது அல்ல. அந்த விஷ்ணுவே அன்பால் தான் கருடனை கட்டுப்படுத்தினார் என கருடனின் வரலாறு சொல்கிறது. கருடனுக்கு இணை கருடன் மட்டுமே. சிவன் கோவிலாக இருந்தாலும், விஷ்ணு கோவிலாக இருந்தாலும் #ஸ்ரீ_ருத்ரம், #புருஷ_சூக்தம் முதலான வேதமந்திரங்கள் எங்கெல்லாம் ஒலிக்க எங்கெல்லாம் #கும்பாபிஷேகம் நடக்கிறதோ? அங்கெல்லாம் கும்பாபிஷேகத்தின் நிறைவு பகுதியான பூர்ணாஹுதியின் பொழுது #கருடாழ்வார் பிரத்யக்ஷம் ஆவார்
கழுகின் ஒரு வகை தான் கருடன் அந்த கருடனின் எண்ணிக்கையே ரொம்ப கம்மி. அவ்வாறு இருக்க எங்கு கோவில் கும்பாபிஷேகம் என்றாலும் கும்பாபிஷேகத்தின் நிறைவு பகுதியில் கருடன் வந்து கோபுரத்தை வட்டமிடுகிறதே அது எவ்வாறு? எனும் கேள்விக்கு அறிவியலால் பதிலை சொல்ல முடியாது.
வைநதேயன் வேதஸ்வரூபி ஆயிற்றே...!
இவை மட்டுமல்ல இன்னும் பல அதிசய நிகழ்வுகள் எங்கள் இந்து தர்மத்தில் உண்டு..!
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment