ஆப்பிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் *பத்து காட்டு நாய்கள்* இருந்தன.
தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.
ஒரு நாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.
*இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.”*
என்று கட்டளையிட்டார்.
வேலைக்காரன் கெஞ்சினான்,
நான் உங்களுக்கு *பத்து வருடங்களாக சேவைசெய்தேன், நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா?*
தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம்
ஒன்று தாருங்கள்!
ராஜா ஒப்புக் கொண்டார்.
அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த *பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.*
காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்
கொண்டார்.
அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.
அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.
பத்து நாட்கள் முடிந்தது.
வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கிஎறியும் படி அரசர் உத்தரவிட்டார்.
*அவன் தூக்கி எறியப்பட்ட போது, அவை ஓடி வந்து அவனின் கால்களை நக்கததொடங்கின*
இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!
இதைப் பார்த்து திகைத்த அரசன்,
"என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?"என்றான்.
வேலைக்காரன் பதிலளித்தான்,
*நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்குசேவைசெய்தேன்*, அவை *என் சேவையை மறக்கவில்லை*
நான் உங்களுக்கு *பத்து வருடங்கள் சேவை செய்தும் என் முதல் தவறைக் கூட மன்னிக்காமல் நான் உங்களுக்கு செய்த அனைத்தையும்மறந்த என்னை தண்டிக்க உத்தரவிட்டீர்கள்!"*
அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தர விட்டார்.
நம்மிலும் எத்தனையோ
பேர் இப்படி இருக்கிறோம்.
*ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் நமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து* அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோ பேர் *நம்மிலும் இல்லாமல் இல்லை.*
இருக்கிறார்கள்.
*தவறுசெய்வது மனித சுபாவம்.இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனிதசுபாவம்•*
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Nice 👌 message.
ReplyDelete